RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

சென்னை:
ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயி களுடன் ஒப்பிட்டு பார்க்க துவங்கியுள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தை பயன் படுத்துவதிலும், அதை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் இந்தியர்கள் கிங்மேக்கராக இருந்தாலும், இந்தியா “வேல்யூ சேன்” (Value Chain) என்ற விஷயத்தை இழந்து வருகிறது.ஒரு சாதாரண தக் காளி விவசாயி இரவு பகலாக தன் பயிருக்கு செலவழிக்கும் உழைப்பு, நீர், உரம் மற்றும் நேரத் துக்குப் பிறகு கிடைக்கும் லாபம் வெறும் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே. ஆனால், அதே தக்காளியை வாங்கி அதிலிருந்து கெட்சப், ஜாம் தயாரித்து, பிராண்ட் பெயருடன் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வாங்கிய தக்காளி விடவும் மூன்று மடங்கு லாபம் அதி கமாகப் 1பெறுகின்றன. இந்த 3 மடங்கு லாப வித்தியாசத்திற்கு முக்கிய காரணம், வெறும் மூலப்பொருளை (commod-ity) விற்பதற்கும், அதை மதிப்பு கூட்டி (value ad-dition) பிராண்டாக்கி – விற்பதற்கும் உள்ள -இடைவெளியாகும் இந்திய விவசாயிகள் தக்காளி வளர்த்து மூலப்பொருளாக விற்பது போல, இந்திய இளைஞர்கள் தரவுகளை உருவாக்கி, கிமி மாடல்களை குறைந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய – அளவில் பயிற்றுவித்து = கொடுக்கும் நிலையில் தான் தற்போது இந்தியாவில் உருவாகியுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை பிராண்டாக்கி, உலக அளவில் விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டும் வாய்ப்பு அமெரிக்க நிறுவனங்களிடம் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இலவச ஏஐ திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு சீன ஏஐ நிறுவனங்கனின் தடாலடியான வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதிரடி அறிவிப்புகள் காணாமல் போய்யுள்ளது. இதற்கு காரணம் இந்தியர் களுக்கு கொடுக்கப்பட்ட இலவச திட்டம் மூலம் மிகப்பெரிய அளவில் அமெரிக்க ஏஐ மாடல் டிரைனாகியுள்ளது. சர்வம் ஏஐ போன்ற பல நிறுவனங்கள் இருந்தாலும் மக்கள் இதை அதிகளவில் பயன்படுத்துவது கிடை யாது. ஏஐ மாடல் பொரு த்தவரையில் டிரைனிங் தான் முக்கியம். 5 வருடத் திற்கு முன் சாட்ஜிபிடியின் பதில்கள் எந்த அளவுக்கு மோசமாக இருந்தது என அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது. இதை செய்யவில்லை எனில், தக்காளி விவசாயிகளின் கதி AI துறையிலும் இந்தியாவுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு உட்பட அனை த்து மாநிலங்களும் தொழில்நுட்பம், தரவு மையங்கள், கிமி திறன் மேம்பாடு ஆகியவற்றில் முதலீடு செய்து, உன்ளூர் நிறுவனங்களை வளர்க்க வேண்டிய காலம் இது. வெறும் மூலப்பொருள் உற்பத்தியாளராக இருந் தால் லாபம் குறைவு. முழு மதிப்புச் சங்கிலியையும் கட்டுப்படுத்தினால்தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி சாத்தியம். இதுதான் இந்தியாவின் ஏஐ எதிர்காலமாக இருக்கும்.

Recent News

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!பலரும் பேசினார்கள். பேசியவர்களில்…

கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…

தங்கத்தின் விலை இன்று 1,120 குறைவு

தங்கத்தின் விலை இன்று…

சென்னை: தங்கத்தின் விலை இன்று (ஜூலை…

குதிரை பேர வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் இன்று செந்தில் பாலாஜி ஆஜராகிறார்

குதிரை பேர வழக்கு:…

சென்னை:தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்…

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: நாமக்கல் கலெக்டர்

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை…

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் லி.மது பாலன்…

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஒழுகினசேரி மேம்பால பணி;…

நாகர்கோவில்:நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று…

1 2 3 4 5 6 33