RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன், இறால் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் செயின்ட் பீட்டர் பால் என்ற தொழிற்சாலையில் நேற்று முன்தினம் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 77 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஜூவான், மலோத்தி ஆகிய 2 பெண் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
திருவள்ளூர் பகுதியில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் 49 பேரும், மீதி உள்ளவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டாக்டர்கள் தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
நேற்று காலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா ஜூங்கா (18), ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீதா ஜூவாங்கா (24), தனியார் மருத்துவவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபினி (22) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மதியம் ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாப்பவதி ஜூங்கா (19), புலோமினி ஆகியோரும் உயிரிழந்தனர். மாலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீதா (23) என்ற பெண் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை நேற்று 8 ஆக உயர்ந்தது. உயிரிழந்த 8 பேரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அஞ்சிலா சுரின் (26) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 60 தொழிலாளர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட்…

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக…

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன்…

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,…

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று…

திருவள்ளூர்:ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026…

1 27 28 29 30 31 33