RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரசு ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பேஸ் ஐடி வருகை பதிவேடு கட்டாயம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

அரசு ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பேஸ் ஐடி வருகை பதிவேடு கட்டாயம்

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன் 1ம் தேதி முதல் முக அடையாள (பேஸ் ஐடி) வருகை பதிவேடு கணக்கிட வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு. இந்த திட்டம் முதற்கட்டமாக மனிதவள மேலாண்மை துறையில் சோதனை முறையில் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டசபை நிகழ்வுகள் தொடர்ச்சியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது, தலைமை செயலக அதரிகாரிகளுக்கு பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார அடிப்படையில் வருகை பதிவு செய்யப்படும் என்ற புதிய விதி அமலுக்கு வர உள்ளது. தமிழக தலைமை செயலாக வரலாற்றில் முதல்முறையாகும். மேலும் இந்த நடவடிக்கை முதற்கட்டமாக மனிதவள மேலாண்மைத் துறையில் இந்த முறை செயல்படுத்தப்படும் என்றும், பின்னர் படிப்படியாக மற்ற விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இது குறித்து துறை வெளியிட்டுள்ள துறைகளுக்கும் இது சுற்றறிக்கையின்படி, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தலைமைச் செ அதன்படி வரும் திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் அனைத்து அதிகாரிகளும் பணியாளர்களும் பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார முறை மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனார். ஜூன் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. அனைத்து பணியாளர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவதோடு, பயோமெட்ரிக் முறையி லும் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். பணியில் இருக்கும் போது அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும் எனத் துறை உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந் த முறை ஏற்கனவே சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், சி ல ஊழியர்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் மற்றும் கவலைகள் காரணமாக, இதன் அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த முறை முழுமையாக அமலுக்கு வர உள்ளது. இதற்கிடையில், தலைமைச் செயலகத்தின் மற்ற துறைகளும் வருகைப்பதிவு விதிகளைக் கடுமையாக்கியுள்ளன: உணவு மற்றும் கூட்டுறவுத் துறையில், பணியாளர்கள் அலுவலக நேரத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அறிவுறு த்தப்பட்டுள்ளனர். ஊழியர்கள் காலை 9.50 மணிக்கும், அலுவலக உதவியாளர்கள் காலை 9.30 மணிக்கும் பணிக்கு வர வேண்டும் என்று அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக் கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் துறைகளில் பயோமெட்ரிக் அல்லது அங்கீகார வருகைப்பதிவு இன்னும் கட்டாய மாக்கப்பட வில்லை. மு க

Recent News

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட்…

1 6 7 8 9 10 12