RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன் வட்டத்தில்

திருப்பத்தூர்:
திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம் மன் வட்டத்தில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 50 வருடங்களாக பொது வழி இருந்தது. அந்த பொது வழிப்பாதையை கடந்த ஒரு வருடமாக திருப்பதி எனும் தனிநபர் அடைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பொது வழியில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். வேலைக்கு போவதற்கும் விவசாயிகள், பணிக்கு செல்பவர்கள் பொது வழி இல்லாததால் அவதிக்குள்ளாகின்றனர். இரண்டு முறை மாவட்ட வழி ஆட்சியரிடம் பொது அமைத்துத் தருமாறு மனு அளித்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது வழியை பயன்படுத்த சென்றால் அந்த தனிநபர் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக செயல்படுகிறார். ஆகையால் இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஊர் பொதுமக்கள் அனை வரும் சென்று மனு அளித்துள்ளோம். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுகுறித்து அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

Recent News

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை… அதிகரித்த எதிர்பார்ப்பு

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு முதல்வர்…

சென்னை:முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல்…

மணலியில் மீத்தேன் கசிவால் பதற்றம்…

மணலியில் மீத்தேன் கசிவால்…

சென்னை மணலியில் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி…

சென்னையில் தொடங்கியது ரஜினியின் 173 வது படத்தின் படப்பிடிப்பு?

சென்னையில் தொடங்கியது ரஜினியின்…

சென்னை:நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்…

‘தமிழக அரசின் வியூகம் புதிய காவிரி நடுவர் மன்றம்’ ஆதவ் அர்ஜுனா

‘தமிழக அரசின் வியூகம்…

சென்னை:மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய…

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு… சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு……

சென்னை:சட்டசபை இன்று 3-வது நாளாக தொடங்கி…

நெல்லை அழகியகூத்தர் கோவில் ஆனி திருவிழா ரத வீதியுலா- திருநடன தீபாராதனை

நெல்லை அழகியகூத்தர் கோவில்…

நெல்லை:நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர்…

1 12 13 14 15 16 33