RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன் வட்டத்தில்

திருப்பத்தூர்:
திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம் மன் வட்டத்தில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 50 வருடங்களாக பொது வழி இருந்தது. அந்த பொது வழிப்பாதையை கடந்த ஒரு வருடமாக திருப்பதி எனும் தனிநபர் அடைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பொது வழியில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். வேலைக்கு போவதற்கும் விவசாயிகள், பணிக்கு செல்பவர்கள் பொது வழி இல்லாததால் அவதிக்குள்ளாகின்றனர். இரண்டு முறை மாவட்ட வழி ஆட்சியரிடம் பொது அமைத்துத் தருமாறு மனு அளித்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது வழியை பயன்படுத்த சென்றால் அந்த தனிநபர் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக செயல்படுகிறார். ஆகையால் இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஊர் பொதுமக்கள் அனை வரும் சென்று மனு அளித்துள்ளோம். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுகுறித்து அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

Recent News

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

அம்பலூர் அரசு மேல்நிலைப்…

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 28 29 30 31 32 33