RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வர் பிறந்தநாள் நல உதவிகள் – சமத்துவ விருந்து

செங்கல்பட்டு:
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பாரதபுரம் அன்பு தொண்டு இல்லத்தில் ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சல்குரு ஏற்பாட்டில் சமத்துவ விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா உளபட படிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாபதி, ஆலப்பாக்கம் துணைத் தலைவர் சத்யா கோபிநாத், ஒன்றிய கவுன்கலர் சரளா மற்றும் வார்டு உறுப்பினர்கள் பாரத புரம் தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Recent News

இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.

இந்திய பொருளாதார வளர்ச்சியை…

புதுடெல்லி:மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள…

1 31 32 33