RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

இன்று மதியம் நீட் தேர்வு: அச்சத்தில் மாணவர் தற்கொலை

தருமபுரி,
2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 3-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஆனால், நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக அந்த தேர்வு ரத்துசெய்யப்பட்ட நிலையில், இன்று மதியம் நீட் மறு தேர்வு நடக்க உள்ளது.
தருமபுரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஏற்கெனவே 3 முறை தேர்வு எழுதி தோல்வியடைந்த வெற்றியானந்தம், 4-வது முறையாக இன்று தேர்வு எழுத இருந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மதியம் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை… அதிகரித்த எதிர்பார்ப்பு

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு முதல்வர்…

சென்னை:முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல்…

மணலியில் மீத்தேன் கசிவால் பதற்றம்…

மணலியில் மீத்தேன் கசிவால்…

சென்னை மணலியில் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி…

சென்னையில் தொடங்கியது ரஜினியின் 173 வது படத்தின் படப்பிடிப்பு?

சென்னையில் தொடங்கியது ரஜினியின்…

சென்னை:நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்…

‘தமிழக அரசின் வியூகம் புதிய காவிரி நடுவர் மன்றம்’ ஆதவ் அர்ஜுனா

‘தமிழக அரசின் வியூகம்…

சென்னை:மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய…

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு… சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு……

சென்னை:சட்டசபை இன்று 3-வது நாளாக தொடங்கி…

நெல்லை அழகியகூத்தர் கோவில் ஆனி திருவிழா ரத வீதியுலா- திருநடன தீபாராதனை

நெல்லை அழகியகூத்தர் கோவில்…

நெல்லை:நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர்…

1 12 13 14 15 16 33