RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், நாகர் கோவில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒழுகினசேரி பகுதியில் இரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி நாகர்கோவில் மாநகராட்சியின் மைய பகுதியில் உள்ளதால் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. மேலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வாகனங்களை மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப் பட்டுள்ளது.
கட்டுமானப்பணிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் தகுந்த மாற்றுப்பாதைகளை சீர மைத்து, எச்சரிக்கை பல கைகள் வைக்கப்பட்டுள் ளது.
தற்போது பக்கசுவர் மற்றும் சாலைகள் அமைப் பதற்காக அருகில் உள்ள இடம் கையகப்படுத்தி, சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அருகில் உள்ள பொதுமக் களுக்கு எந்தவிதமாக இடையூறுகளின்றி மேலும் இப்பணிகளை தாமதிக்கமால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எந்த விதமான காரணமும் கூறாமல், தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயன் பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே கோட்ட பொறியாளர், மாநகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்டவருக்கு அறிவு றுத்தபட்டது. இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற ஆய் வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, நாகர் கோவில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரகுராம், ரயில்வே உதவி செயற்பொறியாளர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Recent News

VB-G RAM G – திட்டம் இன்று முதல் அமல்

VB-G RAM G…

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி…

வாட்ஸ்அப் செயலியில் பயனர் பெயர் அறிமுகம்: சிஇஓ குணால் ஷா வெளியிட்ட பகிர்வு

வாட்ஸ்அப் செயலியில் பயனர்…

சென்னை:வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பயனர் பெயர்…

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிக்கான…

டெல்லி:20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில்…

படிக்கும்போதே ஈவ்-டீசிங் செய்த வாலிபர் தலையை உடைத்த கயாடு லோஹர்.. இணையத்தில் வைரலாகும் பேச்சு

படிக்கும்போதே ஈவ்-டீசிங் செய்த…

கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ மூலம் திரையுலகில்…

5 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற அத்தை; வெளிவந்தது உண்மை

5 வயது சிறுமியை…

மதுரை:மதுரை பைகாரா பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரம்…

’தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளதா? – திருமாவளவன் அதிரடி பேட்டி

’தவெக ஆட்சி கவிழ…

மதுரை:விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை…

1 6 7 8 9 10 33