பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்றது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே சென்றது. பொருளாதார வீக்கத்தை கணக்கில் கொண்டு பிரதமர் மோடி தங்கத்தீன் மீது முதலீடு செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மிக அதிகமாக காணப்பட்ட போதிலும், இந்தியாவின் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் 34 சதவீதம் உயர்ந்து 3.41 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
ஆனால் கடந்த 2025 மே மாதத்தில் 566.22 மில்லியன் டாலராக இருந்த வெள்ளியின் இறக்குமதி இந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 75.57 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது 86.65 சதவீத வீழ்ச்சியாகும்.
தங்கம் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக, இந்தியாவின் ஒட்டு மொத்த வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையேயான வித்தியாசம்) 28.21 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி மதிப்பில் தங்கம் மட்டுமே 5 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்களிக்கிறது.
