RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஜூலை 1-ல் கருப்புக் கொடி ஏந்தி மறியல்: மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் தகவல்

சென்னை:
125 நாட்​கள் வேலை வழங்​கும் வி.பி.ஜி ராம் ஜி புதிய சட்​டத்தை திரும்ப பெறக் கோரி, தமிழகத்​தில் 200-க்​கும் மேற்பட்ட மையங்​களில் ஜூலை 1ல் கருப்​புக் கொடி ஏந்தி மறியல் போராட்​டம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அனைத்​து​ வகை மாற்​றுத்​ திறனாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமை​களுக்​கான சங்கத்தினர் முடிவு செய்​துள்​ளனர்.
இது குறித்​து, சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் தோ.​வில்​சன், மாநில பொதுச்​செய​லா​ளர் பா.ஜான்​சி​ ராணி ஆகியோர் கூட்​டாக வெளியிட்ட அறிக்​கையில், மாற்​றுத்​திற​னாளி​கள் உட்பட கிராமப்​புற விவசாய கூலித் தொழிலா​ளர்​கள் பயன்​பெற்று வந்த “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்​டத்​துக்​குப்” பதிலாக ஜூலை 1 முதல் விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்​டத்தை மத்​திய அரசு அமல்​படுத்தி மாற்​றுத்​ திற​னாளி​களின் வாழ்​வா​தா​ரத்தை சிதைக்க திட்​ட​மிட்​டுள்​ளதை கண்​டித்​தும், இந்த புதிய சட்​டத்தை உடனே திரும்​பப் பெற கோரி​யும், தற்​போது நடை​முறை​யில் உள்ள மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை உறுதி சட்​டத்​தையே தொடர்ந்து அமல்​படுத்த வலி​யுறுத்​தி​யும், புதிய சட்டம் அமலுக்கு வரும் ஜூலை 1ம் தேதியை கருப்பு தின​மாக அனுசரித்​து, கருப்​புக் கொடி ஏந்​தி​ தமிழகம் முழு​வதும் 200-க்​கும் மேற்​பட்ட மையங்​களில் மறியல் போராட்​டம் நடத்த முடிவு செய்யப்​பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Recent News

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா…

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற…

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்…

நாகர்கோவில்: –தமிழக வெற்றி கழக தலைவரான…

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் ஆசிரிய நகரல்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக…

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

பெண் குழந்தை பாதுகாப்பு…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக…

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா

தூத்துக்குடி கல்லூரியில் யோகா…

தூத்துக்குடி:தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு…

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில்…

நாகர்கோவில்:திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில்…

1 9 10 11 12 13 33