சென்னை,
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என யோசித்தேன். நீங்கள் வாருங்கள் என அழைத்தது சந்தோஷம். ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். அதை விரைவில் அறிவிப்பேன்.
விஜய் மீது உள்ள பொறாமை காரணமாகவே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்கின்றன. வளர்ந்து வரும் தவெக-வை பிடிக்காததால் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தினர் தற்குறி அல்ல. அவர்கள் குறிவைத்து தாக்கும் அம்புக்குறி’. பாஜகவில் இருந்து விலகி புது கட்சி தொடங்க உள்ள அண்ணாமலை பற்றி பேசிய அவர், “அண்ணாமலை உட்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். சிறந்த அரசியல் புரிதல் கொண்டவர் அண்ணாமலை” என்றார்.
