RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

சென்னை:
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் அணி எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் ஆதரவு அளித்தனர். இதனால், த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினர் இடம் பெற்றால், குதிரை பேரம் நடந்தது உறுதியாகிவிடும் என்றும். கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பதவியேற்றுக்கொண்ட 23 அமைச்சர்களில், காங் கிரஸ் சுட்சியினர் 2 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க. வினர் மற்றும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் இடம் பெறவில்லை தற்போது. அ.தி.மு.க. 2 ஆக உடைந்து நிற்கி றது. மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 பேரும். சி.வி.சண்முகம் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 பேரும் உள்ளனர். சட்டசபையில் பெரும் பான்மையை நிரூபிக்க த.வெ.சு. அரசுக்கு 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததால், அதில் 5 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
அ தி மு அமைச்சரவையில் ஏன் இடம் பெறவில்லை என்றால் தகுதி நீக்கம் தொடர்பான அச்சம். அதாவது, சி.வி. சண்முகம் எஸ். பி. வேலுமணி உள்ளிட்டவர்கள் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். எடப்பாடி பழனிச்சாமிதான் அவர் களின் ‘பி பார்ம்’ல். அதாவது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தேவையான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளார். மேலும், அ.தி.மு.க.வின் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அவர் நியமித்துள்ளார். அவர் த.வெ.க. நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல் அனுப்பினார். அதனை சி.வி.சண்முகம் எஸ். பி. வேலுமணி அணியின் எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவி ல்லை. த.வெ.சு. வுக்கு ஆதரவாக சட்டசபையில் வாக்களித் தன ர். கொறடா உத்தரவை மீறினால், அந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில், 25 பேரையும் தகுதி நீக் கம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிச்சா மிக்கு ஆதரவாக தீர்ப்பு வர அதிகம் வாய்ப்புள்ளது. இதனால் 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட நேரிடும்அசா தாரண சூழ்நிலையில், அதில் உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவியை முதல் அமைச்சர் விஜய் வழங்கினால், நீதி மன்றமும் அவரது செயலை கண்டிக்க வாய்ப்பு இருக்கிறது ‘அ.தி.மு.க.வினரை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்’ என்று மார்க் சிஸ்ட் சும்யூனிஸ்டு கட்சியின் மாநில செய லாளர் சண்முகம் வெளிப்ப டையாகவே தெரிவித்தார். அதேபோல், இந்திய கம்யூனிஸ்டு சுட்சியும். அ.தி.முக.வினரை அமை ச்சரவையில் சேர்ப்பதற்கு மறைமுகமாக எதிர் ப்பு தெரிவித்தது. இத னால், அ.தி.மு.க. எம். எல். ஏ. க்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து, பிற சுட்சிகளின் ஆதரவை இழக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் விஜய் கருதினார். மேற்கண்ட 2 காரணங்களாலேயே. த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினருக்கு இடம் வழங்கப்படவில்லை என்ற பரபரப்பான தகவல்
வெளியாகியுள்ளது.

Recent News

1.36 லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள்-தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

1.36 லட்சம் எம்பிபிஎஸ்…

நடப்பாண்டில் 1.36 லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்தார்-ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்…

எந்த அதிகாரிக்கும் முதல்வர் மீது நம்பிக்கையில்லை – ஆர்.பி.உதயகுமார்

எந்த அதிகாரிக்கும் முதல்வர்…

லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக அருண் ஐபிஎஸை…

லஞ்ச் புகார் தெரிவிக்க Whatsapp எண் அறிமுகம்

லஞ்ச் புகார் தெரிவிக்க…

தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால்…

அடுத்து மேக் அப் மேனுக்கும் பதவி கொடுத்து விடுவார் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அடுத்து மேக் அப்…

முதலமைச்சர் அவருடைய தேர்தல் வியூக வகுப்பாளரையே…

மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்-நாம் கட்சி தலைவர் சீமான்

மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்-நாம்…

தமிழினம் தன்னை மறந்து,தன் அன்னை மொழியை,…

1 2 3 4 33