RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை:
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் இணைந்து உருவாக்கிய சங்க நிர்வாகிகள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமாரை நேரில் சந்தித்து தங்களது சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
இந்த சந்திப்பில் சங்கத் தலைவர் சிகார் கார்த்திகேசன், செயலாளர் மணிகண்டன், துணைத் தலைவர் செந்தில், பொருளாளர் தீபக் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் அதிகபாரம் ஏற்றக்கூடாது என்ற விதிமுறையை முறையாக பின்பற்றி, லாரிகள் பாதுகாப்பாக இயக்கப்படும் என்பதையும், அதனை கண்காணிக்கும் பொறுப்பை சங்கம் மேற்கொள்ளும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் லாரி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விதிமுறை மீறல் குறையவும் இது உதவும் எனவும் ஆட்சியரிடம் விளக்கமளித்தனர்.
இதனை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது ஒருமித்த கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார். இந்த முயற்சியை ஆட்சியர் வரவேற்று, அரசு விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து செயல்பட சங்கத்தினருக்கு அறிவுறுத்தினார்.

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

1 29 30 31 32 33