RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை:
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் இணைந்து உருவாக்கிய சங்க நிர்வாகிகள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமாரை நேரில் சந்தித்து தங்களது சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
இந்த சந்திப்பில் சங்கத் தலைவர் சிகார் கார்த்திகேசன், செயலாளர் மணிகண்டன், துணைத் தலைவர் செந்தில், பொருளாளர் தீபக் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் அதிகபாரம் ஏற்றக்கூடாது என்ற விதிமுறையை முறையாக பின்பற்றி, லாரிகள் பாதுகாப்பாக இயக்கப்படும் என்பதையும், அதனை கண்காணிக்கும் பொறுப்பை சங்கம் மேற்கொள்ளும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் லாரி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விதிமுறை மீறல் குறையவும் இது உதவும் எனவும் ஆட்சியரிடம் விளக்கமளித்தனர்.
இதனை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது ஒருமித்த கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார். இந்த முயற்சியை ஆட்சியர் வரவேற்று, அரசு விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து செயல்பட சங்கத்தினருக்கு அறிவுறுத்தினார்.

Recent News

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!பலரும் பேசினார்கள். பேசியவர்களில்…

கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…

தங்கத்தின் விலை இன்று 1,120 குறைவு

தங்கத்தின் விலை இன்று…

சென்னை: தங்கத்தின் விலை இன்று (ஜூலை…

குதிரை பேர வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் இன்று செந்தில் பாலாஜி ஆஜராகிறார்

குதிரை பேர வழக்கு:…

சென்னை:தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்…

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: நாமக்கல் கலெக்டர்

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை…

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் லி.மது பாலன்…

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஒழுகினசேரி மேம்பால பணி;…

நாகர்கோவில்:நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று…

1 2 3 4 5 6 33