RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை:
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் இணைந்து உருவாக்கிய சங்க நிர்வாகிகள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமாரை நேரில் சந்தித்து தங்களது சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
இந்த சந்திப்பில் சங்கத் தலைவர் சிகார் கார்த்திகேசன், செயலாளர் மணிகண்டன், துணைத் தலைவர் செந்தில், பொருளாளர் தீபக் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் அதிகபாரம் ஏற்றக்கூடாது என்ற விதிமுறையை முறையாக பின்பற்றி, லாரிகள் பாதுகாப்பாக இயக்கப்படும் என்பதையும், அதனை கண்காணிக்கும் பொறுப்பை சங்கம் மேற்கொள்ளும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் லாரி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விதிமுறை மீறல் குறையவும் இது உதவும் எனவும் ஆட்சியரிடம் விளக்கமளித்தனர்.
இதனை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது ஒருமித்த கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார். இந்த முயற்சியை ஆட்சியர் வரவேற்று, அரசு விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து செயல்பட சங்கத்தினருக்கு அறிவுறுத்தினார்.

Recent News

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில்…

தூத்துக்குடி:தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத்…

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல்…

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையா புரம் ஸ்ரீ முக்கூடல்…

ஆளுநர் ஆய்வுக்கு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர் ஆய்வுக்கு :…

‘ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர்…

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்.

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு…

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க…

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்வேலைவாய்ப்பு!

ரூ. 25 லட்சம் கல்விக் கடன் திட்டம்

ரூ. 25 லட்சம்…

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலரூ. 25…

1 3 4 5 6 7 33