RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை:
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் இணைந்து உருவாக்கிய சங்க நிர்வாகிகள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமாரை நேரில் சந்தித்து தங்களது சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
இந்த சந்திப்பில் சங்கத் தலைவர் சிகார் கார்த்திகேசன், செயலாளர் மணிகண்டன், துணைத் தலைவர் செந்தில், பொருளாளர் தீபக் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் அதிகபாரம் ஏற்றக்கூடாது என்ற விதிமுறையை முறையாக பின்பற்றி, லாரிகள் பாதுகாப்பாக இயக்கப்படும் என்பதையும், அதனை கண்காணிக்கும் பொறுப்பை சங்கம் மேற்கொள்ளும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் லாரி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விதிமுறை மீறல் குறையவும் இது உதவும் எனவும் ஆட்சியரிடம் விளக்கமளித்தனர்.
இதனை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது ஒருமித்த கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார். இந்த முயற்சியை ஆட்சியர் வரவேற்று, அரசு விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து செயல்பட சங்கத்தினருக்கு அறிவுறுத்தினார்.

Recent News

இடதுசாரி கட்சியின் தலைவர்கள் முதல்வருடன் சந்தப்பு

இடதுசாரி கட்சியின் தலைவர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய்…

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர்  சந்திப்பு

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு…

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன்…

இது தர்மசங்கடமான தோல்வி அல்ல. ஆனால் எங்களுக்கு மிகவும் மனச்சோர்வை அளிக்கும் தோல்வி-ஸ்ரேயஸ் அய்யர் விளக்கம்

இது தர்மசங்கடமான தோல்வி…

அயர்லாந்து தொடருக்கு முன் 16 தொடர்களை…

NEET போன்ற சதிகளை தகர்த்தி வெற்றி பெற முயற்சிகளை இந்நாளில்  உறுதியேற்போம்-மு.க ஸ்டாலின்

NEET போன்ற சதிகளை…

மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில்…

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை…

மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில்…

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

1 5 6 7 8 9 33