RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில். மத்திய அரசு நீட் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டில் அச்சத்தை உருவாக் கியுள்ளது. நீட் தேர்வு காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்துள்ளார்.
மாணவர்களின் உயிர் மற்றும் எதிர்காலத்துடன் விளையாடும் நிலை உருவாகியுள்ளது. நீட் தேர்வுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால் தேர்வு மையங்களுக்கே ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினை கள் தொடர்ந்து நடைபெறு கின்றன.
மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கண்டி த்து மாணவர்களை ஒன்றிணைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்குப் பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும். நீட் தேர்வு தொடர்பான மனஅழுத்தம் மற்றும் பிரச்சினைகளால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுகுறித்து மத் திய அமைச்சர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை. சட்டசபையில் எங்களால் தான் நீங்கள் ஆட்சி அமைத்தீர்கள் என்று உதயநிதி கூறியதற்கு முதலமைச்சர் விஜய் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
விஜயை வாழும் காமராசர் என்று கூறிய தற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கண் டனம் தெரிவிக்கிறார். ஆனால் திமுக ஆட்சியில் திருச்சி சிவா, முக்தார் உள்ளிட்டோர் காமராஜரை இழிவாக பேசியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காமராஜர் பிறந்தநாள் வருகிறது. அந்த நாளில் திமுகவினர் மாலை அணிவிக்க வரக்கூடாது. வந்தால் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம். நல்லது செய்ய வெட்கப்படுவது திமுகதான் என்று கூறினார்.

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

1 29 30 31 32 33