RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு

நியூயார்க்:
நீண்டகாலமாக இனப் படுகொலைகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான் என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி விமர்சித்துள்ளார்.
ஆயுத மோதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் என்ற பொருளில் ஐநா பாதுகாப்பு சபையில் திறந்த விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பார்வதனேனி. “நீண்டகாலமாக இனப் படுகொலைகளில் ஈடு பட்ட களங்கப்பட்ட வர லாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான். அப்படிப்பட்ட ஒரு நாடு இந்த அவையில் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை (காஷ்மீர் விவ காரம்) குறித்துப் பேசுவது முரண்பாடானது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் புனித ரமலான் மாதத்தில், அமைதி. சிந்தனை, கருணையின் காலத்தில் ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உமித் போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஒரு காட்டு மிராண்டித்தனமான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதை உலகம் மறக்கவில்லை. எந்த வகையிலும் ராணுவ இருக்க முடியாத ஒரு இலக்காக இடத்தில் கோழைத் தன மான, மனசாட்சியற்ற தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இதில், 269 பேர் உயிரிழந்தனர். 122 பேர் காயமடைந்தனர்.
இருட்டில் அப்பாவி பொதுமக்களைக் குறி வைக்கும் பாகிஸ்தான். -சர்வதேச சட்டத்தின் உயர் கொள்கைகளை ஆதரிப்பது முரண்பாடா னது. ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு எதிராக பாகிஸ்தான் எல்லை தாண்டி நடத்திய வன்முறை காரணமாக 94.000க் -கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்ததாக ஹிழி கிவிகி மதிப்பீட்டுள்ளது. தன் சொந்த மக்கள் மீது குண்டு வீசி திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்திய ஒரு நாடு. இத்தகைய கொடூர ளை செய்வதில் ஆச்ச ஆக்கிரமிப்புச் செயல்க ரியமில்லை.
‘ஆபரேஷன் சர்ச் லைட்’ என்பது 1971ம் ஆண்டு மார்ச் மாதம் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பங்களாதேஷ் தேசியவாத இயக்கத்துக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய ரகசிய பெயர். ‘ஆபரேஷன் சர்ச்லைட்” நடவடிக்கை யின்போது பாகிஸ்தான் தனது சொந்த ராணுவ த்தைக் கொண்டு 4 லட்சம் பெண்களை இனப் படுகொலை செய்யவும், கூட்டுப் பாலியல் வன் கொடுமைகளுக்கு உள்ளாக்கவும் அனுமதித்தது.
இதுபோன்ற மனிதாபி மானமற்ற நடத்தையை பாகிஸ்தான் தனது எல் லைக்கு உள்ளேயும் வெளியேயும் பல பத் தாண்டுகளாக நடத்துகிறது. உள்நாட்டுத் தோல்விகளை மறைக்க மீண்டும் மீண்டும் இத் தகைய நடவ டிக்கைகளில் அது ஈடுபடுகிறது. நம் பிக்கை, சட்டம், அறநெறி என எதுவும் இல்லாத நிலையில், பாகிஸ்தானின் இத்தகைய பிரச்சாரத்தை உலகம் எளிதில் கண்டு கொள்ளும்” என தெரி வித்தார்.ஐநாவுக்கான பாகிஸ் தான் பிரதிநிதி. காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பியதை அடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்திய பிரதிநிதி இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.

Recent News

நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’… டெலிகிராம் உரிமையாளர் பாவெல் காட்டம்

நீட் வினாத்தாள் கசிவு;…

நியூயார்க்இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள்…

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட், எம்பாப்பே இரட்டை கோல்; மெஸ்ஸி ஹாட்ரிக்

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட்,…

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறும் இந்த…

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது… – கவர்னர் உரையாற்றுகிறார்

தமிழக சட்டசபை நாளை…

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்…

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்……

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24…

காற்றில் பறந்த மோடியின் வாக்கு; குறையாத தங்கத்தின் மீதான மோகம்… அதிகரித்துள்ளது இறக்குமதி

காற்றில் பறந்த மோடியின்…

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக…

ஹெலிகாப்டரில் வர உள்ளது நீட் தேர்வு வினாத்தாள்கள்

ஹெலிகாப்டரில் வர உள்ளது…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக…

1 16 17 18 19 20 33