RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு

சிக்கிய 10,000 யாத்ரீகர்கள் மீட்பு

டேராடூன்:
உத்தரகாண்ட் மாநி லத்தில் சமவெளிப் பகு திகளில் வறண்ட வானிலை நிலவுகிறது. அதேசமயம், மலை மாவட்டங்களில் மழை பெய்து வருவதுடன் பனிப்பொழிவும் உள்ளது. பலத்த மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலத்த மழை காரணமாக கேதார் நாத் சிவன் கோவிலுக்கு புனித யாத்திரை செல்லும் பாதையில் நள்ளிரவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.ருத்ரபிரயாக் மாவட்டம் சோன்பிரயாக் சுவுரிகுண்ட் இடையே மலைப்பாதையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. பிரதான நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து தடைப ட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் யாத்திரை சென்றுகொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பயணத்தை தொடர முடிய மல் சிக்கிக் கொண் டனர்.
இதையடுத்து மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தொடர் மழை. இருள் சூழ்ந்த மோசமான வானிலை நிலவியபோதிலும் மீட்புக்குழுவினர் கடுமையாக போராடி, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த 10450 பக்தர்களை மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
மீட்புப் பணிகளை முடிந்தபின், சாலையில் குவிந்திருந்த பாறைகள் மற்றும் இடிபாடுகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. சிறிது நேரத்தில் அதி காரிகள் இந்த பணியை முடித்து, நெடுஞ்சாலை யைச் சீரமைத்தனர். இதையடுத்து வாகன போக்குவரத்து தொடங்கியது.

Recent News

தமிழக அரசு பி.எட் சேர்க்கை கவுன்சிலிங் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு பி.எட்…

சென்னை:தமிழக உயர்கல்வித் துறை, 2026–&27 கல்வியாண்டிற்கான…

திரிணமூல் காங்கிரசில் இருந்து மம்தா  நீக்கம்: அதிருப்தி குழுவினர் அறிவிப்பு

திரிணமூல் காங்கிரசில் இருந்து…

கொல்கத்தா:மேற்கு வங்க மாநில முன்​னாள் முதல்வரும்,…

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணி உடனான…

லண்டன்:இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்… அமளியும்… திமுகவினர் வெளிநடப்பும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்……

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

எதை உடைக்க முடியாது என்று கூறினார்களோ அதை சுக்குநூறாக உடைத்துள்ளோம்: முதல்வர் விஜய்

எதை உடைக்க முடியாது…

சென்னை:தவெக அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க…

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவால்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன்,…

1 11 12 13 14 15 33