RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு

சிக்கிய 10,000 யாத்ரீகர்கள் மீட்பு

டேராடூன்:
உத்தரகாண்ட் மாநி லத்தில் சமவெளிப் பகு திகளில் வறண்ட வானிலை நிலவுகிறது. அதேசமயம், மலை மாவட்டங்களில் மழை பெய்து வருவதுடன் பனிப்பொழிவும் உள்ளது. பலத்த மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலத்த மழை காரணமாக கேதார் நாத் சிவன் கோவிலுக்கு புனித யாத்திரை செல்லும் பாதையில் நள்ளிரவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.ருத்ரபிரயாக் மாவட்டம் சோன்பிரயாக் சுவுரிகுண்ட் இடையே மலைப்பாதையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. பிரதான நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து தடைப ட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் யாத்திரை சென்றுகொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பயணத்தை தொடர முடிய மல் சிக்கிக் கொண் டனர்.
இதையடுத்து மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தொடர் மழை. இருள் சூழ்ந்த மோசமான வானிலை நிலவியபோதிலும் மீட்புக்குழுவினர் கடுமையாக போராடி, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த 10450 பக்தர்களை மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
மீட்புப் பணிகளை முடிந்தபின், சாலையில் குவிந்திருந்த பாறைகள் மற்றும் இடிபாடுகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. சிறிது நேரத்தில் அதி காரிகள் இந்த பணியை முடித்து, நெடுஞ்சாலை யைச் சீரமைத்தனர். இதையடுத்து வாகன போக்குவரத்து தொடங்கியது.

Recent News

59 வருஷம் காங்கிரஸ் பட்ட அவமானங்களுக்கு விடை

59 வருஷம் காங்கிரஸ்…

சென்னை:59 வருஷமாசு பட்ட அவமானங்களும், பட்ட…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில்…

புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

புதிய அமைச்சர்களாக 23…

சென்னை:தமிழக அமைச்சர் களாக காங்கிரஸ் கட்சி…

இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.

இந்திய பொருளாதார வளர்ச்சியை…

புதுடெல்லி:மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள…

1 10 11 12