RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

நாகை:
நாகை அருகே பழமை வாய்ந்த சிகார் புனித பதுவை அந் தோணியார் ஆலய திருத் தேர் பவனி நடைபெற்றது. வீடுகள் தோறும் கிருஷ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மன முருகி வழிபாடு செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிகாரில் தஞ்சா வூர் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பழமை வாய் ந்த புனித பதுவை அந் தோணியார் ஆலயம் இவ் அமைந்துள்ளது. வாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர் பவனி கோலாகலமாக நடை பெற்றது.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப் பரங்களில் பதுவை அந் தோணியார், ஆரோக்கிய மாதா, சம்மனசு ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக பங்கு தந்தை ஜெரால்டு தலைமையில் திருவிழா பாடல், கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் தேரினை புனிதம் செய்து துவங்கி வைத்தார்.

ஆலய வளாகத்தில் இருந்து இசை வாத்தியங் கள் முழங்க தேர் பவனி தொடங்கியது. பவனியானது வான வேடிக்கைகளோடு முக் கிய வீதிகளில் வலம் வந்தது. ஒவ்வொரு வீடுக ளிலும் கிருஷ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தேரினை வரவேற்றும் அந்தோணியார்க்கு மாலை அணிவித்து சாம்பிராணி காட்டி மனமுருகி பிரார்த் தனை செய்தனர். தேர்பவனியை முன்னிட்டு விடிய விடிய அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சி யினை சிகார் கிருஷ்துவ இறை மக்கள் மற்றும் கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Recent News

59 வருஷம் காங்கிரஸ் பட்ட அவமானங்களுக்கு விடை

59 வருஷம் காங்கிரஸ்…

சென்னை:59 வருஷமாசு பட்ட அவமானங்களும், பட்ட…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில்…

புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

புதிய அமைச்சர்களாக 23…

சென்னை:தமிழக அமைச்சர் களாக காங்கிரஸ் கட்சி…

இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.

இந்திய பொருளாதார வளர்ச்சியை…

புதுடெல்லி:மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள…

1 10 11 12