RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

சென்னை:
“தமிழகத்தில் மின்கட்ட ணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப் பப்பட்டு வருகிறது. மின் வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது” என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரி வித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறு ம்போது, “மின்துறையில் சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. சோலார் பேனல் கொள்முதல் விவகாரத்தில் விதிமுறை மீறல் நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தா லும் நடவடிக்கை எடுக் கப்படும். மின்தடை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாலும் நடவடிக்கை மேற்கொள்ள பணிகள் நடந்து வருகிறது.

டிஎன்பிஎஸ்சி பணி நியமனத்தில் எந்த வித முறைகேடும் நடக்காது. மின்சாரத் துறை இரண் டரை லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊழி யர்கள் பற்றாக்குறை யும் உள்ளது. இதற்கு முன்னர் இந்த யார் துறையை நிர்வகித்தார்கள் எனத் தெரியும். கடந்த ஓராண் டாக, மற்ற ஒப்பந்தப் பணிக ளுக்காக தோண்டப்படும் குழிகளில் 160 இடங்களில் பவர் கேபிள்கள் வெட்டப்பட்டுள்ளன.

முதலில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். டெண்டர் எடுப்பதில் இனி எந்த மறைமுக டீலிங்கும் நடைபெறாது. மின்சார விநியோகத்தை சீராக செய்ய அறிவுறுத் தப்பட்டுள்ளது.
மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தப்பட்டுள்ளது. தமிழ கத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Recent News

1.36 லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள்-தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

1.36 லட்சம் எம்பிபிஎஸ்…

நடப்பாண்டில் 1.36 லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்தார்-ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்…

எந்த அதிகாரிக்கும் முதல்வர் மீது நம்பிக்கையில்லை – ஆர்.பி.உதயகுமார்

எந்த அதிகாரிக்கும் முதல்வர்…

லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக அருண் ஐபிஎஸை…

லஞ்ச் புகார் தெரிவிக்க Whatsapp எண் அறிமுகம்

லஞ்ச் புகார் தெரிவிக்க…

தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால்…

அடுத்து மேக் அப் மேனுக்கும் பதவி கொடுத்து விடுவார் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அடுத்து மேக் அப்…

முதலமைச்சர் அவருடைய தேர்தல் வியூக வகுப்பாளரையே…

மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்-நாம் கட்சி தலைவர் சீமான்

மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்-நாம்…

தமிழினம் தன்னை மறந்து,தன் அன்னை மொழியை,…

1 2 3 4 33