RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்கிறது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்தம், தங்கத்தேர் புறப்பாடு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்து பக்தர்கள் தங்கள் ஆலோசனைகள், ஆட்சேபனைகளை ஜூலை 7-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மூலப்பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக பஞ்சாமிர்தம் விலை ஏற்ற கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.45 விற்கப்பட்டு வந்த பஞ்சாமிர்தம் ரூ.60 ஆகவும், ரூ.40க்கு விற்கப்பட்ட பஞ்சாமிர்தம் ரூ.50 ஆகவும், ரூ.20க்கு விற்கப்பட்ட பஞ்சாமிர்தம் ரூ.30 ஆக விலை உயர்த்த கோவில் நிர்வாக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து மற்றும் ஆட்சேபனை ஏதேனும் இருந்தால் ஜூலை 11ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க தேர் இழுத்தல் கட்டணம்

அதேபோல் பழனி மலைக்கோவிலில் தினசரி இரவு 7 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு நடைபெற்று வருகிறது. இந்த தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டு தங்க ரதம் இழுத்து வழிபடும் பக்தர்களுக்கு ரூ.2000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தங்க ரதம் இழுத்து வழிபடும் பக்தர்களுக்கு பரிவட்டம், முருகன் படம், எவர்சில்வர் குடம் உள்ளிட்ட 18 பொருட்கள் வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்வு காரணமாக தங்க ரதம் கட்டணம் ரூ.2500 ஆக உயர்த்த கோவில் நிர்வாகம் சார்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதுவும் ஆலோசனை அல்லது கருத்துக்கள் இருந்தால் ஜூலை 7ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக நேரிலோ அல்லது தபால் மூலமாக தெரிவிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது.

Recent News

தமிழக அரசு பி.எட் சேர்க்கை கவுன்சிலிங் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு பி.எட்…

சென்னை:தமிழக உயர்கல்வித் துறை, 2026–&27 கல்வியாண்டிற்கான…

திரிணமூல் காங்கிரசில் இருந்து மம்தா  நீக்கம்: அதிருப்தி குழுவினர் அறிவிப்பு

திரிணமூல் காங்கிரசில் இருந்து…

கொல்கத்தா:மேற்கு வங்க மாநில முன்​னாள் முதல்வரும்,…

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணி உடனான…

லண்டன்:இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்… அமளியும்… திமுகவினர் வெளிநடப்பும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்……

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

எதை உடைக்க முடியாது என்று கூறினார்களோ அதை சுக்குநூறாக உடைத்துள்ளோம்: முதல்வர் விஜய்

எதை உடைக்க முடியாது…

சென்னை:தவெக அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க…

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவால்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன்,…

1 11 12 13 14 15 33