RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்கிறது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்தம், தங்கத்தேர் புறப்பாடு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்து பக்தர்கள் தங்கள் ஆலோசனைகள், ஆட்சேபனைகளை ஜூலை 7-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மூலப்பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக பஞ்சாமிர்தம் விலை ஏற்ற கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.45 விற்கப்பட்டு வந்த பஞ்சாமிர்தம் ரூ.60 ஆகவும், ரூ.40க்கு விற்கப்பட்ட பஞ்சாமிர்தம் ரூ.50 ஆகவும், ரூ.20க்கு விற்கப்பட்ட பஞ்சாமிர்தம் ரூ.30 ஆக விலை உயர்த்த கோவில் நிர்வாக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து மற்றும் ஆட்சேபனை ஏதேனும் இருந்தால் ஜூலை 11ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க தேர் இழுத்தல் கட்டணம்

அதேபோல் பழனி மலைக்கோவிலில் தினசரி இரவு 7 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு நடைபெற்று வருகிறது. இந்த தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டு தங்க ரதம் இழுத்து வழிபடும் பக்தர்களுக்கு ரூ.2000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தங்க ரதம் இழுத்து வழிபடும் பக்தர்களுக்கு பரிவட்டம், முருகன் படம், எவர்சில்வர் குடம் உள்ளிட்ட 18 பொருட்கள் வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்வு காரணமாக தங்க ரதம் கட்டணம் ரூ.2500 ஆக உயர்த்த கோவில் நிர்வாகம் சார்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதுவும் ஆலோசனை அல்லது கருத்துக்கள் இருந்தால் ஜூலை 7ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக நேரிலோ அல்லது தபால் மூலமாக தெரிவிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது.

Recent News

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!பலரும் பேசினார்கள். பேசியவர்களில்…

கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…

தங்கத்தின் விலை இன்று 1,120 குறைவு

தங்கத்தின் விலை இன்று…

சென்னை: தங்கத்தின் விலை இன்று (ஜூலை…

குதிரை பேர வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் இன்று செந்தில் பாலாஜி ஆஜராகிறார்

குதிரை பேர வழக்கு:…

சென்னை:தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்…

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: நாமக்கல் கலெக்டர்

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை…

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் லி.மது பாலன்…

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஒழுகினசேரி மேம்பால பணி;…

நாகர்கோவில்:நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று…

1 2 3 4 5 6 33