RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மாவட்ட செயலாக்க குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்ந.மிரு ணாளினி தலை மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமூக நலத்துறையின் திட்டங்கள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப் படையில் இன்றையதினம் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மாவட்ட செயலாக்க குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக் கூட் டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் 181 மூலம் வரப்பெற்ற புகார் மற்றும் நடவடிக்கை விபரம், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பெண் குழந்தை பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விபரம், பெண் குழந்தை பாது காப்பு குறித்து பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றவும், மேலும் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் விக்னேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recent News

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு…

சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் சேலம்:சேலம்…

எல்நினோ நிகழ்வில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாப்பது எப்படி?

எல்நினோ நிகழ்வில் இருந்து…

சிவகங்கை மாவட்டம் எல்நினோ நிகழ்வினால், காலநிலையில்…

AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

AI துறையில் மிகப்பெரிய…

சென்னை:ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயி…

59 வருஷம் காங்கிரஸ் பட்ட அவமானங்களுக்கு விடை

59 வருஷம் காங்கிரஸ்…

சென்னை:59 வருஷமாசு பட்ட அவமானங்களும், பட்ட…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில்…

புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

புதிய அமைச்சர்களாக 23…

சென்னை:தமிழக அமைச்சர் களாக காங்கிரஸ் கட்சி…

1 30 31 32 33