RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

சென்னை:
ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயி களுடன் ஒப்பிட்டு பார்க்க துவங்கியுள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தை பயன் படுத்துவதிலும், அதை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் இந்தியர்கள் கிங்மேக்கராக இருந்தாலும், இந்தியா “வேல்யூ சேன்” (Value Chain) என்ற விஷயத்தை இழந்து வருகிறது.ஒரு சாதாரண தக் காளி விவசாயி இரவு பகலாக தன் பயிருக்கு செலவழிக்கும் உழைப்பு, நீர், உரம் மற்றும் நேரத் துக்குப் பிறகு கிடைக்கும் லாபம் வெறும் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே. ஆனால், அதே தக்காளியை வாங்கி அதிலிருந்து கெட்சப், ஜாம் தயாரித்து, பிராண்ட் பெயருடன் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வாங்கிய தக்காளி விடவும் மூன்று மடங்கு லாபம் அதி கமாகப் 1பெறுகின்றன. இந்த 3 மடங்கு லாப வித்தியாசத்திற்கு முக்கிய காரணம், வெறும் மூலப்பொருளை (commod-ity) விற்பதற்கும், அதை மதிப்பு கூட்டி (value ad-dition) பிராண்டாக்கி – விற்பதற்கும் உள்ள -இடைவெளியாகும் இந்திய விவசாயிகள் தக்காளி வளர்த்து மூலப்பொருளாக விற்பது போல, இந்திய இளைஞர்கள் தரவுகளை உருவாக்கி, கிமி மாடல்களை குறைந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய – அளவில் பயிற்றுவித்து = கொடுக்கும் நிலையில் தான் தற்போது இந்தியாவில் உருவாகியுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை பிராண்டாக்கி, உலக அளவில் விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டும் வாய்ப்பு அமெரிக்க நிறுவனங்களிடம் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இலவச ஏஐ திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு சீன ஏஐ நிறுவனங்கனின் தடாலடியான வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதிரடி அறிவிப்புகள் காணாமல் போய்யுள்ளது. இதற்கு காரணம் இந்தியர் களுக்கு கொடுக்கப்பட்ட இலவச திட்டம் மூலம் மிகப்பெரிய அளவில் அமெரிக்க ஏஐ மாடல் டிரைனாகியுள்ளது. சர்வம் ஏஐ போன்ற பல நிறுவனங்கள் இருந்தாலும் மக்கள் இதை அதிகளவில் பயன்படுத்துவது கிடை யாது. ஏஐ மாடல் பொரு த்தவரையில் டிரைனிங் தான் முக்கியம். 5 வருடத் திற்கு முன் சாட்ஜிபிடியின் பதில்கள் எந்த அளவுக்கு மோசமாக இருந்தது என அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது. இதை செய்யவில்லை எனில், தக்காளி விவசாயிகளின் கதி AI துறையிலும் இந்தியாவுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு உட்பட அனை த்து மாநிலங்களும் தொழில்நுட்பம், தரவு மையங்கள், கிமி திறன் மேம்பாடு ஆகியவற்றில் முதலீடு செய்து, உன்ளூர் நிறுவனங்களை வளர்க்க வேண்டிய காலம் இது. வெறும் மூலப்பொருள் உற்பத்தியாளராக இருந் தால் லாபம் குறைவு. முழு மதிப்புச் சங்கிலியையும் கட்டுப்படுத்தினால்தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி சாத்தியம். இதுதான் இந்தியாவின் ஏஐ எதிர்காலமாக இருக்கும்.

Recent News

VB-G RAM G – திட்டம் இன்று முதல் அமல்

VB-G RAM G…

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி…

வாட்ஸ்அப் செயலியில் பயனர் பெயர் அறிமுகம்: சிஇஓ குணால் ஷா வெளியிட்ட பகிர்வு

வாட்ஸ்அப் செயலியில் பயனர்…

சென்னை:வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பயனர் பெயர்…

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிக்கான…

டெல்லி:20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில்…

படிக்கும்போதே ஈவ்-டீசிங் செய்த வாலிபர் தலையை உடைத்த கயாடு லோஹர்.. இணையத்தில் வைரலாகும் பேச்சு

படிக்கும்போதே ஈவ்-டீசிங் செய்த…

கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ மூலம் திரையுலகில்…

5 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற அத்தை; வெளிவந்தது உண்மை

5 வயது சிறுமியை…

மதுரை:மதுரை பைகாரா பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரம்…

’தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளதா? – திருமாவளவன் அதிரடி பேட்டி

’தவெக ஆட்சி கவிழ…

மதுரை:விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை…

1 6 7 8 9 10 33