RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தகவல்

நெல்லை:
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசா யிகளிடமிருந்து கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் (பொ) இரா.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திரு நெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் விவசா யிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், உரிய பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பெய்த கோடை மழையால், பெரும்பாலான நெல் மூட்டைகள் தண் ணீரில் முற்றிலும் நனைந் துள்ளன. இதனால், நெல் மணிகள் முளைத்து. அழுகி வீணாகின்றன என்று செய்தி வெளியானது.
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லினை. மூட்டைகளின் மேல் வைத்து எடுக்கப்பட்டு, இன்று வெளி யிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கை செய்தியானது முற்றிலும் தவறானது. நேரடி ஆய்வில், நெல் மூட்டைகள் எதுவும் மழையில் நனைந்து வீணாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி. திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு பகுதியில் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
மூன்றடைப்பு நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் இதுவரை, 1802 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இன்றுவரை 1700 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதம். 102 மெ.டன் நெல் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதேபோல், மூன்றடைப்பு.2 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 494 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை 200 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்பட்டு, மீதம் 294 மெ.டன் நெல் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
மீதமுள்ள நெல்லினை இயக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மேற்கூறிய நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் கொள்முதல் நடவடிக்கைகள் 13.05.2026 அன்று நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் $ (20.05.2026) முழுமையாக இயக்கம் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனையாத வண்ணம் தார்ப் பாய்கள் கொண்டு மூடி பாதுகாக்கப்படுகிறது.
மேலும், இவ்வாறு தவ றான தகவல் வெளிவர காரணமாக இருந்த நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் பணிபுரியும் நாகராஜபெருமாள். பருவகால உதவுபவர் என்பவரையும், செல்லத்துரை. பருவகால சாவலர் என்பவரையும் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent News

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

1 5 6 7 8 9 12