RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தகவல்

நெல்லை:
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசா யிகளிடமிருந்து கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் (பொ) இரா.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திரு நெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் விவசா யிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், உரிய பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பெய்த கோடை மழையால், பெரும்பாலான நெல் மூட்டைகள் தண் ணீரில் முற்றிலும் நனைந் துள்ளன. இதனால், நெல் மணிகள் முளைத்து. அழுகி வீணாகின்றன என்று செய்தி வெளியானது.
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லினை. மூட்டைகளின் மேல் வைத்து எடுக்கப்பட்டு, இன்று வெளி யிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கை செய்தியானது முற்றிலும் தவறானது. நேரடி ஆய்வில், நெல் மூட்டைகள் எதுவும் மழையில் நனைந்து வீணாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி. திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு பகுதியில் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
மூன்றடைப்பு நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் இதுவரை, 1802 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இன்றுவரை 1700 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதம். 102 மெ.டன் நெல் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதேபோல், மூன்றடைப்பு.2 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 494 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை 200 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்பட்டு, மீதம் 294 மெ.டன் நெல் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
மீதமுள்ள நெல்லினை இயக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மேற்கூறிய நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் கொள்முதல் நடவடிக்கைகள் 13.05.2026 அன்று நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் $ (20.05.2026) முழுமையாக இயக்கம் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனையாத வண்ணம் தார்ப் பாய்கள் கொண்டு மூடி பாதுகாக்கப்படுகிறது.
மேலும், இவ்வாறு தவ றான தகவல் வெளிவர காரணமாக இருந்த நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் பணிபுரியும் நாகராஜபெருமாள். பருவகால உதவுபவர் என்பவரையும், செல்லத்துரை. பருவகால சாவலர் என்பவரையும் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent News

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட்…

1 6 7 8 9 10 12