RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தகவல்

நெல்லை:
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசா யிகளிடமிருந்து கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் (பொ) இரா.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திரு நெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் விவசா யிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், உரிய பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பெய்த கோடை மழையால், பெரும்பாலான நெல் மூட்டைகள் தண் ணீரில் முற்றிலும் நனைந் துள்ளன. இதனால், நெல் மணிகள் முளைத்து. அழுகி வீணாகின்றன என்று செய்தி வெளியானது.
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லினை. மூட்டைகளின் மேல் வைத்து எடுக்கப்பட்டு, இன்று வெளி யிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கை செய்தியானது முற்றிலும் தவறானது. நேரடி ஆய்வில், நெல் மூட்டைகள் எதுவும் மழையில் நனைந்து வீணாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி. திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு பகுதியில் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
மூன்றடைப்பு நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் இதுவரை, 1802 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இன்றுவரை 1700 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதம். 102 மெ.டன் நெல் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதேபோல், மூன்றடைப்பு.2 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 494 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை 200 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்பட்டு, மீதம் 294 மெ.டன் நெல் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
மீதமுள்ள நெல்லினை இயக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மேற்கூறிய நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் கொள்முதல் நடவடிக்கைகள் 13.05.2026 அன்று நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் $ (20.05.2026) முழுமையாக இயக்கம் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனையாத வண்ணம் தார்ப் பாய்கள் கொண்டு மூடி பாதுகாக்கப்படுகிறது.
மேலும், இவ்வாறு தவ றான தகவல் வெளிவர காரணமாக இருந்த நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் பணிபுரியும் நாகராஜபெருமாள். பருவகால உதவுபவர் என்பவரையும், செல்லத்துரை. பருவகால சாவலர் என்பவரையும் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent News

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக…

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன்…

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,…

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று…

திருவள்ளூர்:ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026…

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

அம்பலூர் அரசு மேல்நிலைப்…

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

1 7 8 9 10 11 12