RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

‘தமிழக அரசின் வியூகம் புதிய காவிரி நடுவர் மன்றம்’ ஆதவ் அர்ஜுனா

சென்னை:
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக திருத்தம் செய்ததை அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. திருத்தம் கொண்டுவந்ததற்கான காரணம் குறித்து சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது;
”குடிநீர் பங்கீடுக்காக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. குடிநீர் தேவைக்காக என்று சொல்லி புதிய அணையை கட்ட கர்நாடகா முயற்சி செய்கிறது. குடிநீருக்காக புதிய அணையை கட்டினால் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேகதாது அணையை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கொடுக்கச்சொல்லி கர்நாடக அரசுக்கு ஆதரவாக மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கையை இழந்துவிட்டோம்.
சட்ட வல்லுநகள் கூறியபடியே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என கோருகிறோம். குடிநீர் பங்கீடுக்காக மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. அணை கட்ட வேண்டும் என்றால் புதிய நடுவர் மன்றம் தேவை. கர்நாடக அரசின் வியூகத்துக்கு எதிராக தமிழக அரசின் வியூகமே புதிய நடுவர் மன்றம். புதிய நடுவர் மன்றம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தால் நமக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும்.”
இவ்வாறு அவர் கூறினார்.

Recent News

தவெகவிற்கு தாவ துடிக்கும்…

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜோசப்…

பழனி பஞ்சாமிர்தம் விலை…

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்தம்,…

முதல்வர் விஜய்யின் விவாகரத்து…

தமிழக முதலமைச்சர் விஜய் & அவரது…

3 வயது சிறும்…

கும்மிடிப்பூண்டியில் 3வயது பெண் குழந்தை பாலியல்…

ஜூன் மாதத்திற்கான மகளிர்…

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் மகளிர்…

முதல்வர் விஜய் –…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் &…

1 18 19 20 21 22 33