RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சியில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு

நாகை:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தென்கிழக்கு ஒன்றியம் சார்பில் பாப்பா கோவில் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான சி.ஜோசப் விஜய்யின்ன 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை மாவட்ட செயலாளர் மா. சுகுமார் தமிழக வெற்றி கழக அலுவலகத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழ்வேளூர் தென் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன், ஒன்றிய இணை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய துணை செயலாளர் கார்த்தி, ஒன்றிய பொருளாளர் பிரசாத், ஒன்றிய துணைப் பொருளாளர் மார்க்ஸ், இளைஞர் அணி பொருளாளர் எஸ்.ராஜா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பாப்பா கோயில், ஒரத்தூர், அகர ஒரத்தூர், ஆவராணி, புதுச்சேரி, மகாதானம், ஆலங்குடி, மற்றும் வடுகச்சேரி உள்ளிட்ட ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிளை, வார்டு, பூத் கமிட்டி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் தவெக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Recent News

தவெகவிற்கு தாவ துடிக்கும்…

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜோசப்…

பழனி பஞ்சாமிர்தம் விலை…

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்தம்,…

முதல்வர் விஜய்யின் விவாகரத்து…

தமிழக முதலமைச்சர் விஜய் & அவரது…

3 வயது சிறும்…

கும்மிடிப்பூண்டியில் 3வயது பெண் குழந்தை பாலியல்…

ஜூன் மாதத்திற்கான மகளிர்…

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் மகளிர்…

முதல்வர் விஜய் –…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் &…

1 18 19 20 21 22 33