RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை:
உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சென்னை உயர் நீதிமன் றத்தின் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி, மயிலாடுதுறை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதி டாக்டர்.எல்.எஸ். சத்தியமூர்த்தி, அறி வுறுத் தலின்படி மயி லாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 13.06.2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற உள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் காசோலை மோசடி வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி சார்ந்த வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள். குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் உள்ளிட்ட சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் எடுத்துக் கொள் ளப்படுகின்றன.

மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் மூலம் தீர்வு காணப்படும் வழக்குக ளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும் வழக்காடிகளின் நேரமும், செலவும் மிச்சமாகும் என்பதால், பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சீர்காழி சார்பு நீதிமன்ற வளாகம் மற்றும் தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகங்களிலும் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மாண்புமிகு டாக்டர். எல்.எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Recent News

தவெகவிற்கு தாவ துடிக்கும்…

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜோசப்…

பழனி பஞ்சாமிர்தம் விலை…

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்தம்,…

முதல்வர் விஜய்யின் விவாகரத்து…

தமிழக முதலமைச்சர் விஜய் & அவரது…

3 வயது சிறும்…

கும்மிடிப்பூண்டியில் 3வயது பெண் குழந்தை பாலியல்…

ஜூன் மாதத்திற்கான மகளிர்…

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் மகளிர்…

முதல்வர் விஜய் –…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் &…

1 18 19 20 21 22 33